வார நாட்களில் இந்த வாகனங்கள் மூலமாக 5 முதல் 6 டன்கள் கோழி இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 முதல் 12 டன்கள் வரை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
கோவை: கோவையில் கோழி இறைச்சி கழிவுகளை சேகரித்து தீவனமாக மாற்றம் செய்து மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அதிகளவில் மாசடைந்து வருகின்றன. அதோடு திறந்த வெளிகளிலும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை சேகரிக்க இரு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையம் மூலமாக உரிய முறையில் வீடுகளில் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவாகவும், தீவனமாகவும் மாற்றப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் மூலமாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
வார நாட்களில் இந்த வாகனங்கள் மூலமாக 5 முதல் 6 டன்கள் கோழி இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 முதல் 12 டன்கள் வரை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
மறுசுழற்சி கட்டமைப்பு மூலமாக நாளொன்றுக்கு 7 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. 7 டன் உற்பத்தியை 10 டன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அதிகளவில் மாசடைந்து வருகின்றன. அதோடு திறந்த வெளிகளிலும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை சேகரிக்க இரு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையம் மூலமாக உரிய முறையில் வீடுகளில் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவாகவும், தீவனமாகவும் மாற்றப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் மூலமாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
வார நாட்களில் இந்த வாகனங்கள் மூலமாக 5 முதல் 6 டன்கள் கோழி இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 முதல் 12 டன்கள் வரை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
மறுசுழற்சி கட்டமைப்பு மூலமாக நாளொன்றுக்கு 7 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. 7 டன் உற்பத்தியை 10 டன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.