வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாடவாரியாக 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை: அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை 2.6 லட்சம் பேர் எழுதுகிறார்கள். வரும் 12ம் தேதி முதல் 180 மையங்களில் கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது.
மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் பணியில் காலியாக உள்ள 2,207 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி போட்டி தேர்வு நடத்துகிறது.
வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாடவாரியாக 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 200க்கும் மேற்பட்ட பார்வையாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலை காட்சி பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விவரங்களை www.trb.th.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் பணியில் காலியாக உள்ள 2,207 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி போட்டி தேர்வு நடத்துகிறது.
வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாடவாரியாக 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 200க்கும் மேற்பட்ட பார்வையாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலை காட்சி பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விவரங்களை www.trb.th.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.