பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை நடப்பதைக் கண்டறியச் சிறப்பு பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கன் (30) என்பவரது கடையில் சோதனை செய்ததில், சுமார் 8 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனடிப்படையில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கன் என்பவரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை நடப்பதைக் கண்டறியச் சிறப்பு பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கன் (30) என்பவரது கடையில் சோதனை செய்ததில், சுமார் 8 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனடிப்படையில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கன் என்பவரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.