நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகள் என மொத்தம் 58 வேட்பு மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
கோவை: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகள் என மொத்தம் 58 வேட்பு மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில், 7 நகராட்சிகளில், 198 வார்டுகளும், 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகளும் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, 711 வார்டுகளுக்கு மொத்தம், 3,443 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. கோவையில் உள்ள, 7 நகராட்சிகளில், 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,067 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 33 பேரூராட்சிகளில், 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 2,317 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதன்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அளிக்கப்பட்ட, 3,443 மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3,385 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
கோவை மாவட்டத்தில், 7 நகராட்சிகளில், 198 வார்டுகளும், 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகளும் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, 711 வார்டுகளுக்கு மொத்தம், 3,443 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. கோவையில் உள்ள, 7 நகராட்சிகளில், 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,067 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 33 பேரூராட்சிகளில், 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 2,317 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதன்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அளிக்கப்பட்ட, 3,443 மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3,385 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.