உயிரிழந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சூட்கேஸில் பெண் சடலத்தை கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை புதுரோடு பகுதியில் சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை புதுரோடு பகுதியில் சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.
பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.