கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் கோபால்சாமி(26), இவர் மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சொக்கனூர் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோபால்சாமி கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோபால்சாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபால்சாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் கோபால்சாமி(26), இவர் மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சொக்கனூர் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோபால்சாமி கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோபால்சாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபால்சாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.