கிணத்துக்கடவில் நாய் குறுக்கே வந்ததால் விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் கோபால்சாமி(26), இவர் மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு சொக்கனூர் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோபால்சாமி கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோபால்சாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபால்சாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...