நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கோவை: கோவையில் புதிதாக உருவாக்கப்பட்ட, 4 நகராட்சிகள் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில், நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளிடையே, தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளாக இருந்த கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை, காரமடை ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்த 4 நகராட்சிகளும், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. இந்த நகராட்சிகளில் முதல் நகராட்சி தலைவர்கள் தேர்வாக உள்ளதால் தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ளது.
உள்ளாட்சிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மகளிர் குழுவினர், பெண்கள் அமைப்பினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நான்கு நகராட்சிகளில் மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளாக இருந்த கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை, காரமடை ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இந்த 4 நகராட்சிகளும், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. இந்த நகராட்சிகளில் முதல் நகராட்சி தலைவர்கள் தேர்வாக உள்ளதால் தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ளது.
உள்ளாட்சிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மகளிர் குழுவினர், பெண்கள் அமைப்பினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நான்கு நகராட்சிகளில் மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.