கோவையில் முதல் முறையாக தேர்தலை சந்திக்கும் நான்கு புதிய நகராட்சிகள்..!

நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் புதிதாக உருவாக்கப்பட்ட, 4 நகராட்சிகள் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் நிலையில், நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார் என்பதில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி நிர்வாகிகளிடையே, தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகளாக இருந்த கருமத்தம்பட்டி, கூடலூர், மதுக்கரை, காரமடை ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இந்த 4 நகராட்சிகளும், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. இந்த நகராட்சிகளில் முதல் நகராட்சி தலைவர்கள் தேர்வாக உள்ளதால் தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சிகளில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மகளிர் குழுவினர், பெண்கள் அமைப்பினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., - அ.தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த நான்கு நகராட்சிகளில் மாநில தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தி, தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...