கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றும் நிலையில், 24 மணிநேரமும் தீயணைப்பு வாகன நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை அருகே உள்ள வெள்ளலூரில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை மொத்தமாகக் கொட்டி அவற்றை பிரித்து அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில், தொடர்ந்து அடிக்கடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருவதாக மக்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், மக்கள் கோரிக்கையை ஏற்று கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


கோவை அருகே உள்ள வெள்ளலூரில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை மொத்தமாகக் கொட்டி அவற்றை பிரித்து அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில், தொடர்ந்து அடிக்கடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருவதாக மக்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், மக்கள் கோரிக்கையை ஏற்று கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.