கோவையில் அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரிப்பு..!

கோவை மாநகராட்சி 38வது வார்டு அதிமுக வேட்பாளர் டாக்டர் சர்மிளா சந்திரசேகர் மருதமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து அங்குள்ள பழங்குடியின மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை மாநகராட்சி 38வது வார்டு அதிமுக வேட்பாளர் டாக்டர் சர்மிளா சந்திரசேகர் நேற்று மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து அங்குள்ள பழங்குடியின மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 38து வார்டில் அதிமுக சார்பில் சர்மிளா சந்திரசேகர் களம் காண்கிறார்.

இந்த நிலையில், கோவை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சர்மிளா சந்திரசேகர் அங்குள்ள பழங்குடி மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.



முன்னதாக சர்மிளா சந்திரசேகரை, பழங்குடியின மக்கள் ஆர்த்தி எடுத்தும், சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். அப்போது, அதிமுக ஆட்சியில் அப்பகுதி மக்களுக்கு பட்டா, வீடுகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து மருதமலை அடிவாரத்தில் உள்ள வியாபாரிகள், தளபதி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.



அப்போது பேசிய சர்மிளா சந்திரசேகர், இந்த பகுதியில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தான் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள விடுபட்ட பணிகளை செய்து தருவேன் எனவும் கூறினார்.

இந்த பிரச்சாரத்தின் போது மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அன்பு என்கிற செந்தில்பிரபு, 38வது வார்டு செயலாளர் ராயப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வக்கீல் மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...