இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவர் சனிக்கிழமை திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு சென்றார்.
இந்நிலையில், பணியை முடித்த பிறகு சனிக்கிழமை இரவு அதே தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு வந்த உடுமலையை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வராஜ் மகாலிங்கத்தை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மகாலிங்கத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகின்றனர்.
கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவர் சனிக்கிழமை திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு சென்றார்.
இந்நிலையில், பணியை முடித்த பிறகு சனிக்கிழமை இரவு அதே தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு வந்த உடுமலையை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வராஜ் மகாலிங்கத்தை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மகாலிங்கத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகின்றனர்.