கோவை பெரிய தடாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணி இரவிலும் தொடர்ந்து வருகிறது.

யானைக்கு பழங்கள், வெல்லம் ஆகியவையும் புளி, மிளகு, சுக்கு, மஞ்சள் கலந்த சித்தா சூரணமும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரவிலும் மருத்துவர்கள் முன்னிலையில் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை :கோவை வனக்கோட்டம்,பெரிய தடாகம் கிராமம்அருகில் தனியார் பட்டா நிலத்தில் இன்று காலை உடல் நலிவுற்ற நிலையில் பெண் யானை ஒன்று படுத்திருந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலையடுத்து வனப் பணியாளர்கள் மருத்துவ முதலுதவி சிகிச்சைக்களை அளித்து வருகின்றனர்.



இதனை தொடர்ந்து, முதுமலை வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் வடவள்ளி அரசு கால்நடை மருத்துவர் பிரபு மற்றும் ஆனைக்கட்டி அரசு கால்நடை மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர்யானைக்கு இரத்த நாளம் வழியாக குளுக்கோஸ்உள்ளிட்ட ஊட்டச்சத்து மருந்துகளும், உப்பு வெந்நீர் ஒத்தடம் ஆகியவைவழங்கப்பட்டன.

மேலும், பழங்கள், வெல்லம் ஆகியவையும் புளி, மிளகு, சுக்கு, மஞ்சள் கலந்த சித்தா சூரணமும் வழங்கப்பட்டு மாலையில் யானையை JCB உதவியுடன் எழுப்பி நிற்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது பலனளிக்காத நிலையில், தொடர்ந்து இரவிலும்மருத்துவர்கள் முன்னிலையில் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



யானையின் மருத்துவ சிகிச்சை பணிகளை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் நேரில் பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவ அலுவலர் மரு. மனோகரன்நிகழ்விடம் வந்திருந்து மருத்துவ குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்கி சென்றனர். யானைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக் நேரில் சென்று பார்வையிட்டார்.

இப்பணிகளின் போது கோவை கோட்ட வன விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர், கோவை வனச்சரக அலுவலர், மதுக்கரை வனச்சரக அலுவலர், கோவை சரக வனவர், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...