கோவை பெரிய தடாகம் பகுதியில் உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் உள்ள யானைக்கு வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை:: கோவை பெரிய தடாகம் பகுதியில் உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் உள்ள யானைக்கு வனத்துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் மயங்கிய நிலையில் தரையில் படுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானைக்கு முதலுதவி செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து வன மாவட்ட வன அலுவலருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. யானையை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி வருவதை தடுக்க, சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் மயங்கிய நிலையில் தரையில் படுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், அந்த யானைக்கு முதலுதவி செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து வன மாவட்ட வன அலுவலருக்கும், கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. யானையை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி வருவதை தடுக்க, சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.