கோவை கருமத்தம்பட்டி மற்றும் சுகுனாபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ. 13.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துப் பணிமனைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், முத்துக்குமார் தலைமையில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது, ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனை சோதனை போது, காரை ஓட்டி வந்த சதீஷ்குமார், என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய். 3.12 லட்சத்தை, கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர். மேலும், பணம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மற்றொரு சோதனையின் போது, கோவை சுகுணாபுரம் மைல்கல் சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவரது வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில், ரூபாய்9.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து, கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
அப்பொழுது, ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனை சோதனை போது, காரை ஓட்டி வந்த சதீஷ்குமார், என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய். 3.12 லட்சத்தை, கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர். மேலும், பணம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மற்றொரு சோதனையின் போது, கோவை சுகுணாபுரம் மைல்கல் சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவரது வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில், ரூபாய்9.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து, கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்