கோவையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

கிணத்துக்கடவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிணத்துக்கடவு கலைவானர் வீதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்களிடம் காவல்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கிணத்துக்கடவு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரன் தலைமையில் பெண் காவலர் பவதாரணி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...