கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் சட்டவிரோதமாக கள்ளு இறக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு 20 லிட்டர்கள் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் சட்டவிரோதமாக கள்ளு இறக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு 20 லிட்டர்கள் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் தனியார் விவசாய தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கொண்டம்பட்டி நாகராஜ் மற்றும் கதிர்வேல் என்பவரின் தோட்டத்தில் சோதனை செய்த போது அங்கு தென்னை மரத்தில் கள்ளு இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
பின்னர் அங்கு விற்பனை வைத்திருந்த 20 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் தனியார் விவசாய தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று காலை கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது கொண்டம்பட்டி நாகராஜ் மற்றும் கதிர்வேல் என்பவரின் தோட்டத்தில் சோதனை செய்த போது அங்கு தென்னை மரத்தில் கள்ளு இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.
பின்னர் அங்கு விற்பனை வைத்திருந்த 20 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.