கோவை சிங்காநல்லூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலி

கோவை சிங்காநல்லூர் அருகே பள்ளிக்கு அழைத்து சென்றபோது அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் அருகே அரசு பேருந்து மோதி தந்தை, மகன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஸ்டின் சாமுவேல்(40). தொழிலாளி. இவர் தனது 8-வது படிக்கும் மகன் கிளாரின்(13), மற்றும் 1-வது படிக்கும் மகன் பிராங்க்ளின் (5) ஆகியோரை இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவர் சிங்காநல்லூர் அருகே உள்ள தியேட்டர் அருகே சென்றபோது எதிரே வந்த வாலிபர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது ஏறியது.

இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ஜெபஸ்டின் சாமுவேல் மற்றும் அவரது மகன் கிளாரின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பிராங்களின் காயமடைந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பிராங்கிளின் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாகக் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன்களை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...