கட்சிக்கு உழைத்த மகளிருக்கு சீட் இல்லை, ஆனால் நிர்வாகிகளின் மனைவிகளுக்கு சீட்டா..? அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தின் முன்பு திரண்ட திமுக மகளிரணியினர்

"திமுகவில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் உழைத்தவர்களுக்கு யாருக்குமே சீட் ஒதுக்கவில்லை ஆனால், கட்சிக்கு எவ்விதத்திலும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு கவுன்சிலர் சீட் வழங்காததை கண்டித்தும், முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தின் முன்பு திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.



திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டு வேட்பாளர்கள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், மகளிர் அணியை சேர்ந்தவர்கள் தற்போது, கோவை அவிநாசி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"திமுகவில் 50% மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் உழைத்தவர்களுக்கு யாருக்குமே சீட் ஒதுக்கவில்லை ஆனால், கட்சிக்கு எவ்விதத்திலும் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் கணவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மனைவிக்கு சீட் என்று வழங்கப்பட்டுள்ளது, மிகுந்த வருத்தமளிக்கிறது இது முறையல்ல", என்று அங்கு கூடியிருந்த மகளிர் தெரிவித்தனர்.



கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி என்பதால், அவருடைய வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, கோவை திமுக மகளிர் அணியை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...