கோவை திமுகவினரிடையே தொடரும் வார்டு ஒதுக்கீடு அதிருப்திகள்: 84-வது வார்டை திமுகவிற்கு ஒதுக்க ஆர்ப்பாட்டம்...!

கோவை கிழக்கு மண்டலம் 84 வது வார்டு திமுக கட்சியினருக்குத் தான் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்டோர் திமுகவினர் ஜி.எம் நகர் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, கோவையில் திமுக, அதிமுக, பாஜக போன்ற முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர். நாளை வேட்புமனு செய்யக் கடைசி நாள் என்பதால், மாநகராட்சி அலுவலகங்களில் கட்சியினர் குவிந்து வருகின்றனர்.

அதனையொட்டி, கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டு வேட்பாளர்கள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மண்டலம் 84 வது வார்டு வேட்பாளராகக் கூட்டணி கட்சியினர் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த வார்டு திமுக கட்சியினருக்குத் தான் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஜி.எம் நகர் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், கட்சியினர் கலைந்து செல்லாத காரணத்தினால், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட திமுகவினரைக் கைது செய்தனர்.



84 வார்டு திமுக பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த வார்டு எந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...