சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளனர்.
கோவை: சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளனர்.
கண்ணம்பாளையத்தில் ஏற்கனவே 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் அக்கட்சியின் சார்பில் தலைவர் பதவிக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தர மறுத்ததாலும், எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்காததாலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி என்ற பெயரில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் மக்கள் சேவை முன்னணி போட்டியிட உள்ளது. தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாலதி என்பவர் போட்டியிடுகிறார். சூலூர் கண்ணம்பாளையத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகித் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
கண்ணம்பாளையத்தில் ஏற்கனவே 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் அக்கட்சியின் சார்பில் தலைவர் பதவிக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தர மறுத்ததாலும், எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்காததாலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி என்ற பெயரில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதன்படி கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் மக்கள் சேவை முன்னணி போட்டியிட உள்ளது. தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாலதி என்பவர் போட்டியிடுகிறார். சூலூர் கண்ணம்பாளையத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகித் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.