இந்த வாகனங்கள் மூலம் SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர், கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், அரசு மருத்துவமனை முதல்வர்களின் விழிப்புணர்வு உரைகள் ஒளிப்பரப்பப்பட உள்ளன.
கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி (சூரியன் எப்.எம்) மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் 3கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளது.
SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவைமற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒளிப்பரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி (சூரியன் எப்.எம்) மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் 3கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளது.
SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவைமற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒளிப்பரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.