ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத்

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் வலியுறுத்தியுள்ளார்.



உலக ஈரநில தினத்தை முன்னிட்டு கோவை மண்டல வனத்துறை சார்பில் ஈரநிலங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூர் பகுதியில் உள்ள சொட்டையாண்டி குளக்கரையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

இதில் கோவை மண்டல வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் குளங்கள் என்பது நமக்கு இயற்கையாகக் கிடைத்த வரம்.

அதனை நாம் பாதுகாக்க வேண்டுமெனக் கூறினார். மேலும் குளங்களில் கழிவுகள் சேராமல் தடுப்பதன் மூலம் நமக்குத் தேவையான நீரை இதிலிருந்து பெற முடியும் என்றும் குளம் நீண்ட நாட்களுக்குத் தண்ணீரைத் தேக்கி வைத்துத் திருப்பி அளிக்கக்கூடியது. அதனைப் பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் தன்னார்வலர்களின் பங்கு அதிகம் வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத், உலகில் 97% சதவீதம் கடல் நீர் தான் உள்ளது ஒரு சதவீதம் தான் நன்னீர் உள்ளதெனத் தெரிவித்தார்.



ஆறு குளங்கள் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே மனிதர்கள் உயிர் வாழ முடியும் என கூறிய அவர் குழாயில் தண்ணீர் வந்தவுடன் நாம் குளத்தைப் பராமரிக்க மறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் நொய்யல் ஆறு தற்போது ஆறாக இல்லாமல் சாக்கடையாக உள்ளது என்றும் ஆறு குளங்கள் நமக்கு அழியாத சொத்துக்கள், அதனை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனத் துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இதில் கோவை வனக் கோட்டம் சார்பில் ஈரநில பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், புகைப்பட வல்லுநர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கோவையைச் சார்ந்த விகடன் புகைப்பட கலைஞர் விஜய் எடுத்த பறவைகள் குறித்த புகைப்படம் இரண்டாம் பரிசை வென்றது. அவருக்குச் சான்றிதழ் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...