கோவையில் முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கல்பனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தொண்டாமுத்தூரிலிருந்து தென்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் உலகநாதனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.



அப்போது அவரிடம் ஆவணமின்றி ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் உலகநாதன் விவசாயத்திற்குப் பணம் எடுத்து வந்ததாகக் கூறி அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...