கோவையில் முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயைத் தேர்தல் பறிக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கல்பனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தொண்டாமுத்தூரிலிருந்து தென்கரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் உலகநாதனை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர்.



அப்போது அவரிடம் ஆவணமின்றி ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் உலகநாதன் விவசாயத்திற்குப் பணம் எடுத்து வந்ததாகக் கூறி அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை விடுவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...