கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒப்பண கார வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரியை திருடி தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் சரத் சந்திரன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பேட்டரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல, வரதராஜபுரம் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இரவு இந்த வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 3- பேட்டரிகளை திருடி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் ராஜ்குமார் சிங்கம் வாளுக்கு போலீசில் புகார் செய்தார். அவரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை ஒப்பண கார வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரியை திருடி தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் சரத் சந்திரன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பேட்டரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல, வரதராஜபுரம் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இரவு இந்த வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 3- பேட்டரிகளை திருடி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, வங்கி மேலாளர் ராஜ்குமார் சிங்கம் வாளுக்கு போலீசில் புகார் செய்தார். அவரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.