கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 6 மாத கர்ப்பிணி பெண் உட்பட பட்டதாரி பெண்கள் என 11 பேர் இன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
கோவை: கோவையில் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் 6 மாத கர்ப்பிணி பெண் உட்பட பட்டதாரி பெண்கள் என 11 பேர் இன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதில் கோவை மநீம கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பட்டதாரி பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று கோவை உள்ள ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியைசேர்ந்த 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் 6 மாத கால கர்ப்பிணி பெண்ணான நந்தினி என்பவர் 40 ஆவது வார்டுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பி.எ பட்டதாரியான இவர் இது அடுத்த தலைமுறைக்கான மாற்றம் என்று கூறினார்.
இதே போல் மத்திய மண்டலத்தில் 63 ஆவது வார்டில் போட்டியிடப் பட்டதாரி ரம்யா வேணுகோபால் உள்ளிட்டோரும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அவர் கூறும் போது கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் போது அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
அதே பாணியில் தேர்தலுக்கு முன்பிருந்தே மநீம கட்சியினர் வார்டு வாரிய சென்று பிரச்சனைகளைக் கேட்டறிந்தோம், எனவே நிச்சயமாக மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதில் கோவை மநீம கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பட்டதாரி பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று கோவை உள்ள ஆர்எஸ்புரம் பகுதியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியைசேர்ந்த 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் 6 மாத கால கர்ப்பிணி பெண்ணான நந்தினி என்பவர் 40 ஆவது வார்டுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பி.எ பட்டதாரியான இவர் இது அடுத்த தலைமுறைக்கான மாற்றம் என்று கூறினார்.
இதே போல் மத்திய மண்டலத்தில் 63 ஆவது வார்டில் போட்டியிடப் பட்டதாரி ரம்யா வேணுகோபால் உள்ளிட்டோரும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அவர் கூறும் போது கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் போது அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
அதே பாணியில் தேர்தலுக்கு முன்பிருந்தே மநீம கட்சியினர் வார்டு வாரிய சென்று பிரச்சனைகளைக் கேட்டறிந்தோம், எனவே நிச்சயமாக மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.