மேலும், தான் வெற்றியடையும் பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனையான குப்பை கழிவுகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவை: கோவை தெற்கு தொகுதியின் 63வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ரம்யா வேணுகோபால் போட்டியிடுகிறார்.
தெளிவான செயல் திட்டத்துடன் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்தின் மூலம் கோவை 63வது வார்டு பகுதியில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தன் பிரச்சாரத்தை அவர் தீவிரப்படுத்தி வரும் நிலையில் தனது வேட்புமனுவை கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;
63வது வார்டு பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
மேலும், தான் வெற்றியடையும் பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனையான குப்பை கழிவுகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
63வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தீர்வு காண பணி செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.