இதுவரை கிணத்துக்கடவு பேரூராட்சி 13 வார்டில் போட்டியிட சுயேட்சையாக ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை: அரசியல் கட்சியினர் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
வரும் பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தினமும் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 3 நாட்களாக யாரும் வரவில்லை. இன்றும் யாரும் வராததால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதுவரை கிணத்துக்கடவு பேரூராட்சி 13 வார்டில் போட்டியிட சுயேட்சையாக ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தால் தான் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தினமும் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 3 நாட்களாக யாரும் வரவில்லை. இன்றும் யாரும் வராததால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதுவரை கிணத்துக்கடவு பேரூராட்சி 13 வார்டில் போட்டியிட சுயேட்சையாக ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தால் தான் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.