புகாரின் பேரில் வெரைட்டி ஹால் போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி திருடியதாக செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் உள்ள ஏடிஎம்களில் உள்ளே புகுந்து விலை உயர்ந்த பேட்டரிகளை திருடிவந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோவை மாவட்டத்தில் ராமசாமி லே-அவுட் பகுதியில் வசிக்கக்கூடிய செந்தில் ஏடிஎம் பேட்டரிகளை திருடுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் டவுன்ஹால் கிளையில் ஏடிஎம்முக்கு உள்ளே சென்று பேட்டரியை திருடிச் சென்று இருக்கின்றார்.
இதனிடையே, பேட்டரி திருட்டில் ஈடுபட்ட செந்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக ரத்தினபுரி காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் மீண்டும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றார். ஏடிஎம் இயங்குவதற்கு பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளை திருடுவதே செந்திலின் வாடிக்கையாகும்.
இந்த நிலையில், வெரைட்டி ஹால் போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி திருடியதாக செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோவை மாவட்டத்தில் ராமசாமி லே-அவுட் பகுதியில் வசிக்கக்கூடிய செந்தில் ஏடிஎம் பேட்டரிகளை திருடுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் டவுன்ஹால் கிளையில் ஏடிஎம்முக்கு உள்ளே சென்று பேட்டரியை திருடிச் சென்று இருக்கின்றார்.
இதனிடையே, பேட்டரி திருட்டில் ஈடுபட்ட செந்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக ரத்தினபுரி காட்டூர் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற நிலையில் மீண்டும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி இருக்கின்றார். ஏடிஎம் இயங்குவதற்கு பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரிகளை திருடுவதே செந்திலின் வாடிக்கையாகும்.
இந்த நிலையில், வெரைட்டி ஹால் போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பேட்டரி திருடியதாக செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.