மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் இருந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை 64 வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஐசந்த் மேரி கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாளையிலிருந்து வாக்கு சேகரிப்பைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அக்கட்சியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இதன் மூலம் கோவை மாநகராட்சியில் இது வரை 20 வேட்பாளர்களும் பேரூராட்சியில் 46 வேட்பாளர்களும் நகராட்சியில் 28 வேட்பாளர்கள் என மொத்தம் 94 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.