கோவையில் டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து

புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை புலியகுளம் அந்தோணியார் தேவாலயம் பின்புறம் வசித்து வருபவர் அல்போன்ஸ் என்பவரின் மகன் ஜோஜி. இவர் மாலை நேர டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஜோஜியும் அவரது சகோதரர் ராபினும் புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நபர் ஜோஜியிடம் வாட்டர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஜோஜீ மறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஜோஜியும் அவரது சகோதரரும் வீட்டிற்கு சென்று பின்னர் சிறிது நேரம் கழித்து புலியகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வாட்டர் பாட்டில் கேட்டு டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த நபர்கள் ஜோஜியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தையில் பேசியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றனர்.

இதில், ஜோஜி மற்றும் ராபின் தலை மற்றும் கைகளில் கத்தி குத்து பட்டது. இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோஜி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் விஜய் மற்றும் ஆறுமுகம் என்பவரின் மகன் என்கிற பிரதீப் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சார்லஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...