கோவையில் டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து

புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: டாஸ்மாக் கடையில் வாட்டர் பாட்டில் தர மறுத்த அண்ணன் தம்பிக்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை புலியகுளம் அந்தோணியார் தேவாலயம் பின்புறம் வசித்து வருபவர் அல்போன்ஸ் என்பவரின் மகன் ஜோஜி. இவர் மாலை நேர டிபன் கடையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஜோஜியும் அவரது சகோதரர் ராபினும் புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கியுள்ளனர். பின்னர், அங்கிருந்த பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த மற்றொரு நபர் ஜோஜியிடம் வாட்டர் பாட்டில் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ஜோஜீ மறுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஜோஜியும் அவரது சகோதரரும் வீட்டிற்கு சென்று பின்னர் சிறிது நேரம் கழித்து புலியகுளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வாட்டர் பாட்டில் கேட்டு டாஸ்மாக் கடையில் நின்று கொண்டிருந்த நபர்கள் ஜோஜியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். மேலும் தகாத வார்த்தையில் பேசியதோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றனர்.

இதில், ஜோஜி மற்றும் ராபின் தலை மற்றும் கைகளில் கத்தி குத்து பட்டது. இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோஜி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் விஜய் மற்றும் ஆறுமுகம் என்பவரின் மகன் என்கிற பிரதீப் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சார்லஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...