வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் 70 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சடையப்ப கோனார் என்பவரின் மகன் ரவிச்சந்திரன்( 52). இவர் தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் போர்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது மனைவியும் மகளும் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் 70 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரவிச்சந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சடையப்ப கோனார் என்பவரின் மகன் ரவிச்சந்திரன்( 52). இவர் தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தில் போர்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது மனைவியும் மகளும் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் 70 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ரவிச்சந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.