புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 75 ஆயிரம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் மனைவி கற்பகம் (49). இவர் கிணத்துக்கடவில் இருந்து பேருந்து மூலம் கோவை டவுன்ஹால் வந்தார்.
பின்னர், அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக வேறு ஒரு பேருந்தில் ஏறி சென்றார். கோவை ரயில்நிலையம் பின்பகுதியில் பேருந்தை விட்டு இறங்கியவுடன் தான் கொண்டு வந்திருந்த பையில் வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, கற்பகம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவரின் மனைவி கற்பகம் (49). இவர் கிணத்துக்கடவில் இருந்து பேருந்து மூலம் கோவை டவுன்ஹால் வந்தார்.
பின்னர், அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வதற்காக வேறு ஒரு பேருந்தில் ஏறி சென்றார். கோவை ரயில்நிலையம் பின்பகுதியில் பேருந்தை விட்டு இறங்கியவுடன் தான் கொண்டு வந்திருந்த பையில் வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, கற்பகம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.