‘பப்ஜி’ விளையாட்டால் விபரீதம்: திருப்பூரில் வாலிபரை அரிவாளால் வெட்டிய முதியவர்

திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய முதியவர் கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்க விடாமல், நண்பர்களுடன் ‘பப்ஜி’ விளையாடி இடையூறு செய்து வந்த வாலிபரை முதியவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் முருகம்பாளையம், பாறைக்காட்டை சேர்ந்தவர் கார்த்திக் தாராபுரத்தில் அரசு ஐ.டி.ஐ.,யில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வீட்டுக்கு அருகே துவைக்கும் கல்லில் அமர்ந்து கார்த்திக் தனது நண்பர்களுடன் அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் நண்பர்களுடன் அமர்ந்து கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடினார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமசாமி என்பவர் தூங்குவதுக்கு இடையூறாக இருப்பதாக வந்து கூறி சத்தம் போட்டார். இதனால், இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டினார். காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமசாமியை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாகத் தண்டனை அனுபவித்துக் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...