மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிணத்துக்கடவு பகுதியில் தாமரைக் குளம் அடுத்துள்ள மாசநாயகன்புதூர் ஆத்து மேட்டு பகுதியில் சேவல் சண்டை நடைபெறுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அங்கு சேவல் வைத்து சூதாடிக் கொண்டிருந்த காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (34), தாமரைக்குளம், மெயின் ரோட்டை சேர்ந்த சரத்குமார்(22), கோவை கணபதி நல்லாம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த செந்தில்குமார்(47), கோடங்கிபாளையம் கோபாலகிருஷ்ணன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.