குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!

கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஆண் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை காட்டெருமை கொம்புகளால் தூக்கி வீசி, தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினர்.



காட்டெருமை தாக்குவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். காட்டெருமை தாக்கிய நபரை, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், கரடி, சிறுத்தை புலி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், வனத்துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...