குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, இளைஞரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!

கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.



நீலகிரி: குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டெருமை, இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் ஆண் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞரை காட்டெருமை கொம்புகளால் தூக்கி வீசி, தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் இளைஞர் உயிர் தப்பினர்.



காட்டெருமை தாக்குவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். காட்டெருமை தாக்கிய நபரை, குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், கரடி, சிறுத்தை புலி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி ஊருக்குள் வந்து மனிதர்களை தாக்க நேரிடும் என்பதால், வனத்துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...