பொள்ளாச்சியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் அழித்தனர்.
பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரும் மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மதுபாட்டில்களை அழிக்க உத்தரவிட்டார்.

இதனை அடுத்து இன்று மதுவிலக்கு போலீசார் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 10,446 மது பாட்டில்களைப் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள புறம்போக்கு இடத்திற்குக் கொண்டு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் மது பாட்டில்களை நிலத்தில் கொட்டி அழித்தனர்.
பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீசார் கள்ளச்சந்தையில் மது விற்பனை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரும் மது விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மதுபாட்டில்களை அழிக்க உத்தரவிட்டார்.
இதனை அடுத்து இன்று மதுவிலக்கு போலீசார் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான 10,446 மது பாட்டில்களைப் பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள புறம்போக்கு இடத்திற்குக் கொண்டு சென்று, அதிகாரிகள் முன்னிலையில் மது பாட்டில்களை நிலத்தில் கொட்டி அழித்தனர்.