கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பிச் சென்றதையடுத்து, அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி தப்பிச் சென்றதையடுத்து, அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு கோவை நகரில் நான்கு கோவில்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை காவல்துறை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறைக் கைதி தப்பிச் சென்றது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பிச்சென்ற கஜேந்திரனைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தனிப்படை போலீசார் கோவை சேலம் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இன்று எப்படியும் கஜேந்திரன் சிக்கி விடுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டு கோவை நகரில் நான்கு கோவில்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரை காவல்துறை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் கோளாறு காரணமாகக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறைக் கைதி தப்பிச் சென்றது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பிச்சென்ற கஜேந்திரனைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது தனிப்படை போலீசார் கோவை சேலம் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இன்று எப்படியும் கஜேந்திரன் சிக்கி விடுவார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.