கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவன் கைது

பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலத்திற்கு வளையார் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கேரள காவல்துறை ஆணையர் நாசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் வாளையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹமது ஹரீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாளையார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வாளையார் வழியாக கேரளா நோக்கி வந்த சுற்றுலா பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது பயணி ஒருவரின் கையில் 8 கிராம் எம். டி. எம். ஏ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணியிடம் நடந்த விசாரணையில், எர்ணாகுளம் மாவட்டம் கணியனூர் அடுத்த சேரா நெல்லூரை சேர்ந்த எபின் 26, என்பதும் எம்.பி.ஏ மாணவரான இவர் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து எபினை கைது செய்து அவரிடமிருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...