பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பெங்களூருவிலிருந்து கோவை வழியாகக் கேரளாவிற்கு பேருந்தில் போதைப்பொருள் கடத்திய எம்.பி.ஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலத்திற்கு வளையார் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கேரள காவல்துறை ஆணையர் நாசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் வாளையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹமது ஹரீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாளையார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வாளையார் வழியாக கேரளா நோக்கி வந்த சுற்றுலா பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது பயணி ஒருவரின் கையில் 8 கிராம் எம். டி. எம். ஏ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பயணியிடம் நடந்த விசாரணையில், எர்ணாகுளம் மாவட்டம் கணியனூர் அடுத்த சேரா நெல்லூரை சேர்ந்த எபின் 26, என்பதும் எம்.பி.ஏ மாணவரான இவர் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எபினை கைது செய்து அவரிடமிருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து கேரள மாநிலத்திற்கு வளையார் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கேரள காவல்துறை ஆணையர் நாசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில் வாளையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முஹமது ஹரீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாளையார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூருவிலிருந்து கோவை வாளையார் வழியாக கேரளா நோக்கி வந்த சுற்றுலா பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது பயணி ஒருவரின் கையில் 8 கிராம் எம். டி. எம். ஏ போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பயணியிடம் நடந்த விசாரணையில், எர்ணாகுளம் மாவட்டம் கணியனூர் அடுத்த சேரா நெல்லூரை சேர்ந்த எபின் 26, என்பதும் எம்.பி.ஏ மாணவரான இவர் பெங்களூருவில் இருந்து கேரளாவிற்குப் போதைப் பொருட்களைக் கடத்தி செல்வது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எபினை கைது செய்து அவரிடமிருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.