கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூரில் கனரா வங்கி மண்டல அலுவலகம் சார்பாக CSR திட்டத்தின் கீழ் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் சுமார் 100 மாணவர்களுக்கு கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் மண்டல கனரா வங்கி சார்பில் கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு 11 வகையான பொருட்கள் அடங்கிய பள்ளிக்கூட 'கிட்' வழங்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் தொரவலூர், கணக்கம்பாளையம், பெருமாநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, மண்டல மேலாளர் சத்தியநாராயணன், துணை பொது மேலாளர் பாஸ்கரன், கோட்ட மேலாளர் மகேஷ் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.

மேலும், வாய்ப்பாடு, உண்டியல், பிளாஸ்டிக் பாக்ஸ், பென்சில், பேனா உட்பட 11 பொருட்கள் அடங்கிய 350 ரூபாய் மதிப்புள்ள கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 100 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மண்டல கனரா வங்கி சார்பில் கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு 11 வகையான பொருட்கள் அடங்கிய பள்ளிக்கூட 'கிட்' வழங்கப்பட்டது.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக, கனரா வங்கியின் மண்டல அலுவலகம் சார்பில் தொரவலூர், கணக்கம்பாளையம், பெருமாநல்லூரில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, மண்டல மேலாளர் சத்தியநாராயணன், துணை பொது மேலாளர் பாஸ்கரன், கோட்ட மேலாளர் மகேஷ் ஆகியோர் பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும், வாய்ப்பாடு, உண்டியல், பிளாஸ்டிக் பாக்ஸ், பென்சில், பேனா உட்பட 11 பொருட்கள் அடங்கிய 350 ரூபாய் மதிப்புள்ள கல்வி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 100 மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.