கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றும் படி கோவில் நிர்வாகத்தினர், போலீசார் அறிவுறுத்தி இருந்தாலும் மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர்.
கோவை: கோவையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பேரூர் கோவிலில் திரண்ட மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமாவாசைகளில் மிக முக்கியமான அமாவாசையாக தை மாதம் வரும் அமாவாசை திகழ்கிறது. இந்நாளில் பொதுமக்கள் பலரும் முன்னோர்கள் மற்றும் உறவினர்கள் இறப்பிற்கு தர்ப்பணம் செய்வது, திதி கொடுப்பது வழக்கம்.
அதன்படி, தை அமாவாசை நாளான இன்று கோவையில் பிரசித்தி பெற்ற கோவிலான பேரூர் பட்டீசுவரர் கோவில் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் அதிகாலையில் இருந்தே குவிந்து வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றும் படி கோவில் நிர்வாகத்தினர், போலீசார் அறிவுறுத்தி இருந்தாலும் மக்கள் குவிந்த வண்ணமே உள்ளனர். இதனால் கோவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படலாம் என எண்ணப்படுகிறது.
