மாணவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு கூடிய பள்ளி மாணவர்கள், சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சூயஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்காக பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அங்கு கூடிய பள்ளி மாணவர்கள், சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் சூயஸ் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 8 மாணவர்கள் மீது நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடுகளையும் மீறி கூடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.