அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கு: இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4-பேர் கைது

அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4- பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: அன்னூரில் பைனான்சியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உட்பட 4-பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர், இந்து முன்னணி நிர்வாகியாகியான குட்டி என்கிற ராஜேந்திரன் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அண்மையில், அவரிடம் இருந்து பிரிந்து சென்று சரவண சுந்தரம் தனியாக நிதி நிறுவனம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இதையடுத்து, தமிழ்செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நிதி நிறுவனத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக் கொண்டு தமிழ்செல்வன் பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் சரவண சுந்தரத்திற்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த (ஜன.27) வியாழக்கிழமை தமிழ்செல்வன், தனது நண்பர் ராஜராஜனுடன் சேர்ந்து சரவண சுந்தரத்தை வெட்டி கொலை செய்து, இருவரும் அன்னூர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்விவகாரத்தில் திருப்பமாக, இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றியதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உறவினர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அன்னூர் பகுதியில் தலைமறைவாகி இருந்த இருவரையும் காவல்துறையினர் (ஜன.28) கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்கு, கூட்டுச்சதி செய்தல் என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...