ராமநாதபுரம் அரசு பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: ராமநாதபுரம் அரசு பள்ளியில் சூயஸ் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகக் கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளவிளையாட்டு மைதானத்தில் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகப்பள்ளம் தோண்டப்பட்டு தொட்டிக் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அங்குக் கூடிய பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் என கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்த மாணவர்கள் இப்பிரச்சனை குறித்துக் கூறுகையில், இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் தான் பேசும்படி கூறினார். இதனையடுத்து, காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகக் கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளவிளையாட்டு மைதானத்தில் குடிநீர்த் தொட்டி அமைப்பதற்காகப்பள்ளம் தோண்டப்பட்டு தொட்டிக் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அங்குக் கூடிய பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சூயஸ் திட்டத்தில் பள்ளி மைதானத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணிகளை நிறுத்த வேண்டும் என கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து அங்கு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்த மாணவர்கள் இப்பிரச்சனை குறித்துக் கூறுகையில், இது குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் தான் பேசும்படி கூறினார். இதனையடுத்து, காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.