கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்குவதா..? அமைச்சர் செந்தில் பாலாஜி கார் முற்றுகை.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில், கவுன்சிலர் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.



கோவை: கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி வாகனத்தை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.



கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவை வந்திருந்தார்.நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் போது, திமுகவினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட காத்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், வார்டு 54 இல் திமுக கட்சியினருக்கு கவுன்சிலர் சீட்டு வழங்காமல், கூட்டணி கட்சிக்கு சீட்டு வழங்கியதை கண்டிப்பதாக தெரிவித்தனர்.

இது குறித்து, காரில் இருந்த அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர்சட்டென்று புறப்பட்டுச் சென்றார், என்று தெரிவித்தனர்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை, திமுகவினரே முற்றுகையிட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...