கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில், கவுன்சிலர் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
கோவை: கோவையில் திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி வாகனத்தை முற்றுகையிட்ட திமுகவினரால் பரபரப்பு.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும், திமுகவினருக்கு சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதை கண்டித்து திமுகவினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவை வந்திருந்தார்.நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் போது, திமுகவினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் இருக்கும் மூன்று வாயில்களிலும் திமுகவினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட காத்திருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர், வார்டு 54 இல் திமுக கட்சியினருக்கு கவுன்சிலர் சீட்டு வழங்காமல், கூட்டணி கட்சிக்கு சீட்டு வழங்கியதை கண்டிப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து, காரில் இருந்த அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, பதில் ஏதும் சொல்லாமல் அமைச்சர்சட்டென்று புறப்பட்டுச் சென்றார், என்று தெரிவித்தனர்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாகனத்தை, திமுகவினரே முற்றுகையிட்ட சம்பவம் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.