கோவைப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலிலிருந்த சுமார் 75-கிலோ எடையிலான ரூ.45- ஆயிரம் மதிப்புடைய பித்தளை குத்துவிளக்கைத் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஐயப்பன் கோயிலில் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்கைத் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவைப்புதூரில் உள்ள கல்லூரி ஜங்சன் அருகே ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர், நேற்று காலை கோயிலைத் திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்துள்ளது.
பின்னர், கோவிலுக்குள் சென்று பார்த்த போது, கோயிலிலிருந்த சுமார் 75 கிலோ எடையிலான ரூ.45 ஆயிரம் மதிப்புடைய பித்தளை குத்து விளக்கு திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே,இது குறித்து கோயில் நிர்வாக அறங்காவலர் பிரபாகரனுக்கு அவர்தகவல் கொடுத்துள்ளார்.
இது குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குத்துவிளக்கைத் திருடிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.