கோவையில் உதவி ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேர்தல் அதிகாரிகள் மாற்றம்..!

மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் உதவி ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் தலா 5 வார்டுகளுக்கு ஒருவர் வீதம் 20 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால், வார்டு ஒதுக்கீடு இறுதியாக போட்டியிட விரும்புவோர் மட்டும் விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ளனர். நேற்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்த நிலையில், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மண்டல உதவி ஆணையர் சங்கர் ஒதுக்கப்பட்டிருந்த 62, 63, 64, 65, 84, ஆகிய வார்டுகளுக்கு காண உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் கணக்கு சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஒதுக்கியிருந்த 7, 22, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு உதவி நகரமைப்பு அலுவலர் விமலாவை நியமித்து மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...