மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: கோவையில் உதவி ஆணையர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் தலா 5 வார்டுகளுக்கு ஒருவர் வீதம் 20 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால், வார்டு ஒதுக்கீடு இறுதியாக போட்டியிட விரும்புவோர் மட்டும் விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ளனர். நேற்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மண்டல உதவி ஆணையர் சங்கர் ஒதுக்கப்பட்டிருந்த 62, 63, 64, 65, 84, ஆகிய வார்டுகளுக்கு காண உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் கணக்கு சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஒதுக்கியிருந்த 7, 22, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு உதவி நகரமைப்பு அலுவலர் விமலாவை நியமித்து மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில் தலா 5 வார்டுகளுக்கு ஒருவர் வீதம் 20 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியாததால், வார்டு ஒதுக்கீடு இறுதியாக போட்டியிட விரும்புவோர் மட்டும் விண்ணப்ப படிவம் பெற்று சென்றுள்ளனர். நேற்று ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், மத்திய மண்டல உதவி ஆணையர் சங்கர் மற்றும் கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஆகியோருக்கு தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மண்டல உதவி ஆணையர் சங்கர் ஒதுக்கப்பட்டிருந்த 62, 63, 64, 65, 84, ஆகிய வார்டுகளுக்கு காண உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி ஆணையர் கணக்கு சுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்டல உதவி ஆணையர் மாரிச்செல்வி ஒதுக்கியிருந்த 7, 22, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு உதவி நகரமைப்பு அலுவலர் விமலாவை நியமித்து மாநகராட்சி ஆணையர் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.