கோவையில் குடியிருப்பு பகுதியில் 2 காவலர்கள் மோதல் - போலீசார் விசாரணை..!

இரண்டு காவலர்களும் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் 2 காவலர்கள் மோதி கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் பட்டாலியனில் பணியாற்றும் போலீஸ்காரர்கான குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ராமச்சந்திரன் (32), முருகானந்தம் (30) ஆகியோர் எதிரெதிர் வீடுகளில் வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன் கோவை நாலாவது பட்டியலில் பணியாற்றுகிறார். முருகானந்தம் டெல்லியில் எட்டாம் பட்டாலியன் இல் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில், நேற்று ராமச்சந்திரனுக்கும் முருகானந்த்திற்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் அங்கு கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராமசுந்தரம் சரமாரியாக தாக்கினார். காயமடைந்த அவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் குனியமுத்தூரில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் முருகானந்தம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல், முருகானந்தத்தின் மனைவி தனது கணவருடன் ராமச்சந்திரன் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றொரு புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்தனர்.

இரண்டு காவலர்களும் மோதிக்கொண்டு விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் எந்த பிரச்சினைக்காக மோதிக் கொண்டார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...