கொரோனா காரணமாக, அரசியல் கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாக மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் துவங்கியுள்ள நிலையில், கோவையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற முக்கிய கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி வருகின்றன. இன்று இரவு அல்லது நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. கோவை கடைவீதி பகுதிகளான, டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கொரோனா காரணமாக, அரசியல் கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாக மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், சுயேட்சை சின்னங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதால், பல்வேறு சுயேட்சை சின்னங்களுடன் கூடிய கொடிகளும் தயாரிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கும் என்று கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கூட்டணி உறுதியானவுடன், அந்தந்த கட்சி சின்னங்களை இணைத்தும் கொடிகள் தயாரிக்க இருப்பதாகவும், கொடி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கான கடைகளில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதால், அதிக எண்ணிக்கை ஆர்டர் கொடுத்தாலும், உடனடியாக கிடைத்து விடுவதால், கோவை மட்டுமல்லாமல் அருகிலுள்ள நகரப்பகுதிகளில் இருந்தும் கட்சியினர் வந்து வாங்கி செல்வதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தேவையான அளவுகளில் துணியை தைத்து, ஸ்கீரின் பிரிண்டிங் செய்து கொடிகளை தயார் செய்து வைத்துள்ள கொடி தயாரிப்பாளர்கள் அரசியல் கட்சியினரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் பி்ரச்சாரம் தீவிரம் அடையும் நிலையில் விற்பனையும் அதிகரிக்கும், என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் துவங்கியுள்ள நிலையில், கோவையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற முக்கிய கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தி வருகின்றன. இன்று இரவு அல்லது நாளை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கோவையில் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு மற்றும் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. கோவை கடைவீதி பகுதிகளான, டவுன்ஹால், பெரியகடை வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் பல அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கொரோனா காரணமாக, அரசியல் கொடிகள் விற்பனை கடந்த இரு வருடமாக மந்தமாகவே இருந்து வந்தாகவும், தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், சுயேட்சை சின்னங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதால், பல்வேறு சுயேட்சை சின்னங்களுடன் கூடிய கொடிகளும் தயாரிக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கும் என்று கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கூட்டணி உறுதியானவுடன், அந்தந்த கட்சி சின்னங்களை இணைத்தும் கொடிகள் தயாரிக்க இருப்பதாகவும், கொடி தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
நூற்றுக்கணக்கான கடைகளில் கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணி நடைபெற்று வருவதால், அதிக எண்ணிக்கை ஆர்டர் கொடுத்தாலும், உடனடியாக கிடைத்து விடுவதால், கோவை மட்டுமல்லாமல் அருகிலுள்ள நகரப்பகுதிகளில் இருந்தும் கட்சியினர் வந்து வாங்கி செல்வதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தேவையான அளவுகளில் துணியை தைத்து, ஸ்கீரின் பிரிண்டிங் செய்து கொடிகளை தயார் செய்து வைத்துள்ள கொடி தயாரிப்பாளர்கள் அரசியல் கட்சியினரின் தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய இருப்பதாகவும், அடுத்த சில தினங்களில் பி்ரச்சாரம் தீவிரம் அடையும் நிலையில் விற்பனையும் அதிகரிக்கும், என எதிர்பார்த்து காத்துள்ளனர்.