கோவை செட்டிபாளையம் - பெரிய குயிலி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கோவை: கோவை செட்டிபாளையம் அருகே பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கோவை செட்டிபாளையம் - பெரிய குயிலி சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும், காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள் யார்? எந்த ஊர்? என்பது குறித்தும், விபத்து தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.