நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிட முடிவு..!

இதையடுத்து, முதல் கட்டமாக 6 வேட்பாளர்களை அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் அறிமுகப்படுத்தினார்.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவை உக்கடம் பகுதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வேட்பாளர்கள் விருப்பமனு பெறப்பட்டது.



இதையடுத்து முதல் கட்டமாக 6 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக 11 இடங்களில் போட்டியிடுவதாகவும், முதல் கட்ட வேட்பாளர்கள் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வார்டு சீரமைப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் அதிகம் உள்ள பகுதிகள் பெண்கள் வார்டாக அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாகவும், இதனால் இருதரப்பினருக்கும் மோதல் உருவாகும் சூழல் உருவாவதாக தெரிவித்தார்.

மேலும், குறைவான கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளதாக கூறினார். மேலும், வரும் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கோவையில் செல்வபுரம் உக்கடம் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வார்டுகளில் தற்போது மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை களம் இறங்கியுள்ளனர். இதனால் திமுக வாக்குகள் சிதர வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு கூட்டணியில் இல்லாத போது ஆதரவளித்த மனிதநேய ஜனநாயக கட்சி இந்த முறை தனியாக களம் காண்கிறது. இதனால் திமுகவின் வாக்குகளை சிதறடிக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...