கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல்

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட பாஜக வினர் 485 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேர்காணல் நடத்தி வருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திமுகவினர் வார்டு பங்கீடு குறித்து கூட்டணி கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடையும் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, அதிமுக பாஜக கூட்டணியில் இது வரை வார்டு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறாத சூழலில், கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.



பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர் எல்.முருகனுடன், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி மற்றும் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.



கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட பாஜக வினர் 485 பேர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், இன்று இரவு 10 மணி வரை நேர்காணல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. நேர்காணலில் பங்கேற்பவர்களிடம், சுமார் 30 கேள்விகள் கேட்கப்படுகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று இரவுக்குள், கோவை உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போகும் 100 வார்டுகளுக்கான பிரதிநிகள் அறிவிக்கபடுவார்கள், என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...